உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பயனாளிக்கு தையல் எந்திரத்தை வழங்கினார்.

திருவாரூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-06-08 09:23 GMT   |   Update On 2023-06-08 09:23 GMT
  • பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
  • 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளு மாறு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு இலவச சலவை பெட்டியினையும் மற்றும் திட கழிவு மேலாண்மையில் சிறந்த பங்களிப்பு கொண்டவர்களுக்கும், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்குபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றிதழினையும், உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு பசுமை சாம்பியின் விருதினை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

பின்னர் உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்துதுறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனிதுணை ஆட்சியர் அழகர்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News