கோவை அரசு ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக நர்சுகள் போராட்டம்
- போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கோவை:
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.
இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
இன்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் எனும் உயிர் நீதிமன்ற தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஒப்பந்த முறை அத்துக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.