உள்ளூர் செய்திகள்

பெருங்களத்தூரில் புதிதாக திறந்த சீனிவாசாநகர் மேம்பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

Published On 2023-07-08 07:22 GMT   |   Update On 2023-07-08 07:22 GMT
  • ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் திணறி வருகின்றன.
  • பாலம் அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல்போய் விடும்.

தாம்பரம்:

பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே மாநில நெடுஞ்சாலை, ரெயில்வே நிர்வாகம் இணைந்து ரூ.234 கோடி செலவில், மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டு உள்ளன.

ஜி.எஸ்.டி. சாலையில், செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதை சில நாட்களுக்கு முன்பு வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பால சாலை, சர்வீஸ் சாலை, ரவுண்டானா ஆகிய இடங்கள் தற்போது தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் திணறி வருகின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ஆரம்பத்திலேயே இதனை தடுக்க வேண்டும். இல்லையெனில், பாலம் அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல்போய் விடும். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியாது' என்றார்.

Tags:    

Similar News