உள்ளூர் செய்திகள்
கீழப்பாவூர் யூனியன் பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்கப்படுமா?
- சாலையடியூர் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது.
- சாலை மிகவும் பள்ளங்கள் நிறைந்து உருக்குலைந்து காணப்படுகிறது.
தென்காசி:
கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூரில் இருந்து மருதடியூர், சாலையடியூர் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது.
பள்ளி மாணவர்கள், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் என பலரும் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் ரெயில்வே கேட் வரை செல்லும் சாலையும் மிகவும் பள்ளங்கள் நிறைந்து உருக்குலைந்து காணப்படுகிறது.
எனவே இந்த இரு சாலைகளையும் செப்பனிட்டு தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.