உள்ளூர் செய்திகள்

 தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த கூரை வீடு.

பகண்டை கூட்டு ரோடு அருகேதீ விபத்தில் கூரைவீடு எரிந்து சேதம்:

Published On 2023-02-14 14:43 IST   |   Update On 2023-02-14 14:43:00 IST
இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே எகால் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து வீட்டில் இருந்த மாரிமுத்து மகன் குமார் அலறியடித்து க்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கூரை வீட்டின் மீது தண்ணீரை ஊற்றியும், கூரை வேயப்பட்ட சோகயை பிடுங்கி எரிந்தும் தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த நெல் மூட்டைகள், துணி, மின்சாதன பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் உளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News