உள்ளூர் செய்திகள்

கனமழையால் வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்.

கனமழையால் நெற்பயிர்கள் சேதம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-09-29 08:08 GMT   |   Update On 2022-09-29 08:08 GMT
  • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
  • நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.

நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றிய பகுதியில் 2 நாள் மழையால் 100 ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமருகல் வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை அறுவடை பணிகள் துவங்கியது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவில் பெய்த கனமழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ண புரம், திருப்–புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, அம்பல், பொறக்குடி, மருங்கூர், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல் மழைநீர் சூழ்ந்தது.நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கோ.46,1009,பிபிடி நெல் ரகங்கள் 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.தற்போது மழை நீர் வடிய தொடங்கி வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்

ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் இப்படி ஆகி விட்டது என்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News