கியூட் நுழைவுத்தேர்வு இன்று நிறைவு
- கியூட் நுழைவுத்தேர்வு 21-ந்தேதி தொடங்கியது.
- 5 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வு இன்றுடன் முடிவடைந்தது.
சேலம்:
மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) சார்பில் பொதுபல்கலைக்கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
அதன்படி நடப்பாண் டுக்கான தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21-ந்தேதி தொடங்கியது.
இந்த தேர்வுக்கு 14.99 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 5 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வு இன்றுடன் முடிவடைந்தது.
இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் திரளானோர் பங்கேற்று எழுதினர். சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், தடுமாற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.