உள்ளூர் செய்திகள்

கடலூரில் பரபரப்பு: இளம் பெண்ணை கடத்தி உல்லாசமாக இருந்த கிராம நிர்வாக அலுவலர்

Published On 2022-06-28 08:53 GMT   |   Update On 2022-06-28 08:53 GMT
  • இளம் பெண்ணை கடத்தி உல்லாசமாக இருந்த கிராம நிர்வாக அலுவலரை போலீசார் தேடிவருகிறார்கள்.
  • பட்டா வாங்க வந்தபோது இளையராஜாவிற்கும் அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் பேசிக் கொண்டிருந்தனர்.

கடலூர்:

கடலூர் சேடப்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக இளையராஜா பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய அலுவலகத்திற்கு பட்டா பெயர் மாறுதல் கேட்டு திருமணமான இளம்பெண் வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் பட்டா வாங்க வந்தபோது இளையராஜாவிற்கும் அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இளம்பெண்ணை இளையராஜா படம் எடுத்து உள்ளார்.

அந்த படத்தை காட்டி தன்னிடம் உல்லாசமாக இருக்க இளையராஜா இளம்பெண்ணை மிரட்டி உள்ளார். ஆனால் இளம்பெண் இதற்கு ஒத்து வராத நிலையில் மகாபலிபுரம் உல்லாச விடுதிக்கு அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பலமுறை அவரை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிய நிலையில் அவர் மகாபலிபுரம் விடுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையெடுத்து காவல் துறையில் புகார் அளித்து இளம்பெண்ணை மீட்டு வந்தனர். அந்த இளம்பெண் தன்னை இளையராஜா பலமுறை பலாத்காரம் செய்ததாக கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News