உள்ளூர் செய்திகள்

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா

Published On 2022-06-24 09:57 GMT   |   Update On 2022-06-24 09:57 GMT
  • சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 13 பேர் பாதிக்கப்பட்டனர்.
  • மகுடஞ்சாவடியில் 4 பேர் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.

நேற்று முன்தினம் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது . இதில் சேலம் மாநகராட்சியில் மட்டும் 5 பேருக்கும், எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவருக்கும், மகுடஞ்சாவடியில் 4 பேர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக ெகாரேனா பரவ வாய்ப்பு உள்ளது. நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மேலும் 39 பேர் ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிகாரிகள் வலியுறுத்தல்

இனி வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும கடை பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News