உள்ளூர் செய்திகள்

நெய்வேலியில் சாலை விபத்தில் ஒப்பந்த தொழிலாளி பலி

Published On 2023-02-20 13:24 IST   |   Update On 2023-02-20 13:24:00 IST
  • கணபதி (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில்பராமரிப்பு துப்புரவாளராகப் பணியாற்றி வந்தார்.
  • இவர் வழியில், வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,

கடலூர்:

நெய்வேலியில் வட்டம் 13-ல் வசித்து வருபவர் கணபதி (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான நீச்சல் குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு துப்புரவாளராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் குறவன்குப்பத்திற்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். வேலுடையான்பட்டு கோயில் அருகே சென்றபோது வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News