கூட்டத்தில் டி.எஸ்.பி முருகவேல் பேசினார்.
கந்துவட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம்
- கூட்டத்தில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் கந்துவட்டி,மீட்டர்வட்டி,தினவட்டி என பல்வேறு வகையான கூடுதல்வட்டிகளால் சில்லரை வணிகர்கள் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கந்துவட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யத்தில் கந்து வட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் வேதாரணியம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் சுப்ரியா, வேதாரணியம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்கொடி, தலைஞாயிறு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேதார ணியம் தலைஞாயிறு, வாய்மேடு, கரியாபட்டினம் சுற்றுவட்டார பொது மக்களும் கலந்து கொ ணண்டனர். கூட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் கந்துவட்டி மீட்டர்வட்டி தினவட்டி என பல்வேறு வகையான கூடுதல்வட்டிகளால். சில்லரை வணிகர்கள் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர் மேலும் கந்து வட்டி சம்பந்தமான பல பிரச்சினைகளை குறித்து பொதுமக்கள் ேபசினர்.கூட்ட முடிவில் துணை கண்காணிப்பாளர் முருகவேல் பேசுகையில்:-
கந்து வட்டி சம்பந்தமான எந்த புகார் வந்தாலும் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அச்சப்படமால் புகார் அளிக்கலாம் புகார் அளித்தவுடன் உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.