உள்ளூர் செய்திகள்

கோவையில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

Published On 2023-03-19 09:54 GMT   |   Update On 2023-03-19 09:54 GMT
  • செந்தில்குமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
  • போலீசார் அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்திய கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை,

கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, ராமசாமி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). கட்டிட தொழிலாளி. இவர் எஸ்ஓசியில் உள்ள கட்டுமான கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம்போல கட்டிடத்தின் 2-வது தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு கம்பிகளை எடுத்துச் சென்றபோது, கட்டிடத்தின் அருகே சென்ற உயர்அழுத்த மின்கம்பியின் மீது இரும்பு கம்பி உரசியது. இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் மனைவி காமாட்சி (25) போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News