உள்ளூர் செய்திகள்

உறைகிணறு அமைக்கும் பணியை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே உறை கிணறுகள் அமைக்கும் பணி

Published On 2022-08-13 09:20 IST   |   Update On 2022-08-13 09:20:00 IST
  • லெக்கையன்கோட்டை ஊராட்சி, அரங்கநாதபுரத்தில் உறைகிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
  • அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஒட்டன்சத்திரம்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் லெக்கையன்கோட்டை ஊராட்சி, அரங்கநாதபுரத்தில் உறைகிணறு அமைக்கும் பணி தொடங்கியது.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தும், மரக்கன்றுகளை நட்டுவைத்து பேசினார்.

இதில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ்,மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்பொன்ராஜ், ஒன்றியக்குழு தலைவர்அய்யம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News