உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முத்துப்பேட்டையில் காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

Published On 2023-05-14 09:09 GMT   |   Update On 2023-05-14 09:09 GMT
  • கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றது.
  • முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முத்துப்பேட்டை:

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றது.

இதனை கொண்டாடும் வகையில் முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பட்டாசு வெடித்தனர்.

அதேபோல் முத்துப்பே ட்டை பெரிய கடைதெரு விலும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கி பெற்றியை பகிர்ந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக், மாவட்ட செயலாளர்கள் ஜெகபர் அலி, சுந்தரராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் தக்பீர் நெய்னா முகமது, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா, மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் ஜேம்ஸ், நகர துணைத்தலைவர் ஹசன், நகர பொருளாளர் குலாம் ரசூல், நிர்வாகிகள் ஜிபிலி, இஜாஸ், ஷகீல், சேக்தாவூது, அப்சல், தமீம் அன்சாரி, முஜமில் உட்பட ஏராளமாேனார் கலந்துக் கொண்டனர்.

முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைதெருவில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் வடுகநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு களும் வழங்கினர்.

Tags:    

Similar News