உள்ளூர் செய்திகள்
- கட்சியினர் தலைப்பாகை மற்றும் மாலை, சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- முரளிதரன் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி ஓசூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன் தலைமையில் கட்சியினர் மைசூர் தலைப்பாகை மற்றும் மாலை, சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, முரளிதரன் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரவீன், இர்ஷாத், சுரேஷ், மற்றும் மாவட்ட துணைத்தலைவர் அர்ஷாத், கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.