உள்ளூர் செய்திகள்

தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி சாம்பியன் கோப்பை வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2022-11-04 08:55 GMT   |   Update On 2022-11-04 08:55 GMT
  • நீலகிரி மாவட்டம் ஊட்டி டாக்டர் கே.ஜே ஜி பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.
  • சப் ஜூனியர் பிரிவில் சந்தியா 65 கிலோ எடையில் தங்கம் வென்றார்.

ஊட்டி,

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் நீலகிரி மாவட்டம் ஊட்டி டாக்டர் கே.ஜே ஜி பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.

இதில் சப் ஜூனியர் பிரிவில் சந்தியா 65 கிலோ எடையில் தங்கம் வென்றார். பிரஜித் 32 கிலோ எடை பிரிவிலும், பிரனீத் 34 கிலோ எடை பிரிவிலும், யுதை 36 கிலோ எடை பிரிவிலும், மாணவிகள் பிருந்தா 44 கிலோ எடை பிரிவிலும், பிரதயா 40 கிலோ எடை பிரிவிலும், கீர்த்தி லட்சுமி 42 கிலோ எடை பிரிவிலும்,கனிஷ்கா 56 கிலோ எடை பிரிவிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

இதேபோல் ஹரிஹரன் 38 கிலோ எடை பிரிவிலும், பிரதிஷ்கா 44 கிலோ எடை பிரிவிலும், வீணா 32 கிலோ எடை பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றனர். சப் ஜூனியர் எடை பிரிவிற்கான 3 வது இடத்தை பெற்று அதற்கான கோப்பையையும் பெற்றனர்.

இவர்களைப் பாராட்டும் விதமாக பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தாளாளர் சந்திரன், பள்ளி முதல்வர் எஸ்வந்த் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களை பாராட்டி பேசினர். அர்ஜுன் டேக்வாண்டோ பயிற்சியாளர், ஜெகநாதன் உடல் கல்வி ஆசிரியர், ராஜேஸ்வரி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்து பாராட்டினர்.

Tags:    

Similar News