உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தகராறு: 4 பேர் மீது வழக்கு

Published On 2023-10-20 07:53 GMT   |   Update On 2023-10-20 07:53 GMT
  • கர்ணகியும் வந்து ஆபாசமாக பேசி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
  • கலையரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

பண்ருட்டி திருவதிகை குட்டை தெருவை சேர்ந்த வர் சுப்பிரமணி (வயது52), இவரது மனைவி கர்ணகி (48), பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). அவரது மனைவி கலையரசி (45). இவர்கள் எதிரெதிர் வீட்டி னர். கடந்த 18-ந் தேதி மாலை ராஜேந்திரன் மனைவி கலையரசி வீட்டின் முன்பு தண்ணீர் தெளித்து வாசலை பெருக்கி கோலம்போட்டுக் கொண்டிருந்த போது எதிர் வீட்டு வாசலுக்கு தண்ணீர் சென்றதால் சுப்பிரமணியும் அவரது மனைவி கர்ணகியும் வந்து ஆபாசமாக பேசி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசில் கலையரசி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.

இதே போல கடந்த 30-ந் தேதி ராஜேந்திரன் தனது வாகனத்தை சுப்பிரமணி வீட்டு வாசலில் நிறுத்திய தாகவும் ஏன் எங்கள் வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்து கிறீர்கள் என்று சுப்பிரமணி கேட்டுள்ளார் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்தி ரன் அவரது மனைவி கலை யரசி ஆகியோர் சுப்பிரமணி மற்றும் கர்ணகியையும் ராஜேந்திரன் மற்றும் மனைவி கலையரசி ஆகி யோர் ஆபாசமாக திட்டி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பண்ருட்டி போலீசில் கர்ணகி கொடுத்த புகாரின் பண்ருட்டி போலீசார் ராஜேந்திரன் மற்றும் மனைவி கலையரசி ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News