உள்ளூர் செய்திகள்

சித்தாமூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

Published On 2022-11-05 16:16 IST   |   Update On 2022-11-05 16:16:00 IST
  • செய்யூர் எம்.எல்.ஏ பனையூர் பாபு தலைமையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
  • கர்ப்பிணி பெண்களுக்கு சீதன பொருட்கள், பேறுகால நிதி உதவி வழங்கப்பட்டது

மாமல்லபுரம்:

கூவத்தூர் அடுத்த சித்தாமூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செய்யூர் எம்.எல்.ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். உத்திரமேரூர் எம்.எல்.ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், சித்தாமூர் ஒன்றிய தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மொத்தம் 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அவர்களுக்கு சீதன பொருட்கள், பேறுகால நிதி உதவி, சத்துணவு பெட்டகங்கள் உள்ளிட்ட அரசு வழங்கும் நல உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அரசு திட்டத்திற்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Similar News