உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பரிதாப சாவு

Published On 2023-04-25 07:20 GMT   |   Update On 2023-04-25 07:20 GMT
  • பிரதீப் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
  • சாலையில் குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரதீப் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சக்தி நகரை சேர்ந்தவர் அன்பழ கன். இவரது மகன் பிரதீப் (வயது 37). இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவரும், இவரது நண்பர் சசிகுமார் (37) ஆகிய இருவரும் கடந்த 22-ந் தேதி பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் கீரம்பூர் 4 ரோடு பகுதியில் சென்ற போது, சாலையில் குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரதீப் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரதீப், மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் அவரை காப்பாற்றி சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரதீப் உயிரி ழந்தார். இதனிடையே காய மடைந்த சசிகுமார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News