உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயம்
- கவிதா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் அழகு நிலையத்திற்கு சென்ற கவிதா திரும்பி வீட்டிற்கு வரவில்லை.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்னகாவனம் தலையாரி பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 22). இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் அழகு நிலையத்திற்கு சென்ற கவிதா திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.