உள்ளூர் செய்திகள்
- நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.
- பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள சின்னமுருக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் காரி மங்கலம் அரசு கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கம்பை நல்லூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.