உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-03-27 09:42 GMT   |   Update On 2023-03-27 09:42 GMT
  • சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
  • இதனால் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள பூமரத்தூர் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி.

இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் மாலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு ேதடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News