உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
- போலுபள்ளியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
- மனவேதனையில் இருந்த ரூபேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ரூபேஷ் (வயது 19).
இவர் கிருஷ்ணகிரி போலுபள்ளியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கல்லூரிக்கு சரியாக செல்லவில்லை என அவர் தாய் கேள்வி கேட்டுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த ரூபேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.