உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே கல்லூரி மாணவி திடீர் சாவு

Published On 2023-05-23 09:13 GMT   |   Update On 2023-05-23 09:13 GMT
  • சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 19).கடலூர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை மாநிலததில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News