மீன்பிடி இறங்குதளம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
- ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
- கொடியம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 2000-க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் மேற்குவ ங்கம் நேஷனல் என்வராயில்மெண்ட் வைல்டு லைப் சொசைட்டி மூலம் சதுப்புநில காடுகள் (மாங்குரோவ் காடுகள்) விரிவாக்கம் செய்வதற்கான இடம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் லலிதா படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து கொடிய ம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றைபார்வையிட்ட ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது காவல் கண்கா ணிப்பாளர் நிஷா, மேற்கு வங்கத்தை சேர்ந்த நேஷனல் என்விரான்மென்ட் சொசைட்டியின் நிர்வாகி அஜந்தா டே, மாவட்ட கடல் சார் சட்ட அமலாக்க பிரிவு ஆய்வாளர் வெர்ஜினியா, வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.