உள்ளூர் செய்திகள்

சுதந்திர தின விழாவில் நலத் திட்ட உதவிகளை கலெக்டர் பழனி வழங்கிய போது எடுத்த படம்.

சுதந்திர தினவிழாவில் 20 பேருக்கு ரூ.25.37 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

Published On 2023-08-15 09:35 GMT   |   Update On 2023-08-15 09:35 GMT
  • பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
  • அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

விழுப்புரம்:

சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று காவல்த்துறை, வனத்துறை, தீயணைப்பு ஆகிய துறையினர் ஊர்காவல், தேசிய மாணவர் படையினர், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து பரிசுகளை வழங்கினார்.

அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 200 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்கள் 20 பேருக்கு ரூ.25,37,246 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தமிழக பாரம்பரிய கலையான மல்லர்கம்ப கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் பழனி வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக காந்தி சிலைக்கு கலெக்டர் பழனி, நகராட்சி ஆணையர் ரமேஷ் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சர்க்கரை தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி பின்னர் விழாவிற்கு வந்திருந்த கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .துணைத் தலைவர் சித்திக் அலி,விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ், கவுன்சிலர்கள் மணவாளன், சிவக்குமார்,அமர் ஜி.உஷா மோகன், வசந்தா, மகாலட்சுமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News