கோவை தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை
- கோகுலகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அலுவலகத்திற்கு சென்றார்.
- போலீசார் கண்காணிப்பு காமிராக்களை பார்த்து மர்மநபர்களை தேடுகின்றனர்.
பீளமேடு,
கோவை சின்னியம்பாளையம் கோகுலம் நகரை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(வயது36).
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் அவரது தாயாரும் வசித்து வந்தார். இந்த நிலையில் கோகுலகிருஷ்ணனின் தாய் வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். கோகுலகிருஷ்ணன் மட்டும் வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று காலை கோகுலகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தார்.
அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போய் இருந்தது.
இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கோவை சின்னியம்பாளையம் பி.எல்.எஸ். நகரை சேர்ந்தவர் குருராஜ். இவரது மனைவி பானு மதி(66). இவர் சம்பவத்தன்று தனது மகளை பார்ப்பதற்காக நடந்து சென்றார்.அப்போது் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், பானுமதியின் அருேக வந்ததும் அவர் கழுத்தில் அணிந்திருந்த ¾ பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பியோ டிவிட்டார். இதுகுறித்து பானுமதி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபரை தேடி வருகின்றனர்.