உள்ளூர் செய்திகள்

கோவையில் மாநகராட்சி தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-05-22 09:34 GMT   |   Update On 2023-05-22 09:34 GMT
  • கணவன்-மனைவி 2 பேரும் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை உக்கடம் அருகே எஸ்.எச் காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது47).

இவரது மனைவி லதா (41). கணவன்-மனைவி இருவரும் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றனர்.

பரமசிவத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பரமசிவம் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போ து மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பரமசிவம் வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து கரைத்துக்  குடித்தார். சிறிது நேரத்தில் அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த அவரது மனைவி அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News