உள்ளூர் செய்திகள்

தேங்காய் சுட்டு ஆடி பண்டிகையை கொண்டாடியவர்களை படத்தில் காணலாம்.

ஆடி பண்டிகையை முன்னிட்டு தேங்காய் சுட்டு வழிபாடு

Published On 2022-07-18 12:30 IST   |   Update On 2022-07-18 12:30:00 IST
  • ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவர்.
  • பொதுமக்களும்,குழந்தைகளும்,புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு வழிபட்டனர்.

பரமத்திவேலூர்:

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவர். ஆனால் தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கால் அவரவர் வீட்டிலேயே நீராடி கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் மாலை பொதுமக்களும்,குழந்தைகளும்,புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு வழிபட்டனர்.

மாலை புதுமண தம்பதியினர்,குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவுல்,பொட்டு கடலை, நாட்டுச்சர்க்கரை,எள்,அரிசி,பாசிப்பருப்பு ஆகிய பொருட்களை இளம் தேங்காயில் அடைத்து வாதனா மரக்குச்சியில் இணைத்து தெருமக்கள் ஒன்று கூடி தீயில் சுட்டு மகிழ்ந்தனர். தீயில் சுட்டு வெடித்த தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் அந்த தேங்காயை உடைத்து உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்தவற்றை அக்கம்,பக்கத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து உண்டு தலையாடி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News