உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி

Published On 2023-02-16 10:03 GMT   |   Update On 2023-02-16 10:03 GMT
  • மயிலாடுதுறை குத்தாலத்தில் மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளான பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
  • மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய அரசின் 11 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கான தமிழ் வழி போட்டி தேர்வுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிவேல் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் செய்திருந்தார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுந்தர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News