உள்ளூர் செய்திகள்

மஞ்சப்பை இயக்கத்தில் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்- பொதுமக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

Published On 2023-06-06 02:58 GMT   |   Update On 2023-06-06 02:58 GMT
  • உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி முதலமைச்சர் சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
  • மக்காத்தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக பிரித்துப்போட வேண்டும்.

சென்னை:

உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் மையக்கருவாக பிளாஸ்டிக் (நெகிழி) மாசுபாட்டை வெல்லுங்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அளவற்ற, தேவையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். மக்காத்தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக பிரித்துப்போட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News