உள்ளூர் செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக களக்காடு தலையணை மூடல்-வனத்துறை அறிவிப்பு

Published On 2023-06-15 08:46 GMT   |   Update On 2023-06-15 08:46 GMT
  • களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது.
  • தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. வனத்துறை யினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்க ப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடையே பராமரிப்பு பணிகளுக்காக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News