பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்
- வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
- நிகழ்ச்சியில் 950-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
விழாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார்.
தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரி - ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவின் முதன்மையர் செந்தில்குமார் மற்றும் ஒன் லைப் ஒன் சாய்ஸ் லைஃப் ஸ்கில்ஸ் அகாடமியின் தலைவரும் உளவியல் பயிற்சியாளருமான கார்த்திக் வேலு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நு ட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
கல்வி குழுமத்தின் இணைச் செயலர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தனர். நிர்வாகத் தலைவர் மணிகண்ட குமரன், கல்விசார் இயக்குனர் மோகன், தேர்வு நெறியாளர் சின்னதுரை, மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் ஹரி நாராயணன், முதலா மாண்டு துறை முதன்மையர் தேவராஜன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் வாழ்த்துரை யாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடு களை துறைதலைவர் முனைவர் தீபா, கூடுதல் துறை தலைவர்கள் முனைவர் பொன்சடைலட்சுமி, முனைவர் தாரணி, முனைவர் மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்வில் 950 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.