உள்ளூர் செய்திகள்

கடலூரில் பரபரப்பு: நிலம் ஆக்கிரமிப்பு பிரச்சினையில் இரு கோஷ்டியினர் மோதல்-கவுன்சிலர் கணவர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு

Published On 2022-10-26 14:53 IST   |   Update On 2022-10-26 14:53:00 IST
  • சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
  • பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.

கடலூர்:

கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கரதாஸ் (வயது 46). இவரது மனைவி ராஜலக்ஷ்மி. இவர் 36- வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று சுனாமி நகரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிலர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சங்கரதாஸ் அகற்றும் போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பக்கிரி உள்ளிட்ட சிலர் சங்கர் தாஸை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பக்கிரி மனைவி உஷா என்பவரை சங்கர்தாஸ் மற்றும் ஒரு சில சேர்ந்து நெட்டி தள்ளினர்.

இதில் சங்கரதாஸ், உஷா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சங்கர்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், பக்கிரி, குப்புராஜ், வினோ, ரவீந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீதும், உஷா கொடுத்த புகாரின் பேரில் சங்கரதாஸ், வெள்ளையன், கபிலன் உள்ளிட்ட 6 பேர் மீதும் என மொத்தம் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Tags:    

Similar News