உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல்

Published On 2023-06-15 07:43 GMT   |   Update On 2023-06-15 07:43 GMT
  • முன்விரோத தகராறு காரணமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது .
  • 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் சேர்ந்தவர் அன்பழகன்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வருகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் முன்விரோத தகராறு காரணமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது . இந்த மோதலில் அன்பழகன், புனிதா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் புனிதா, சிவா, நாகராஜ் ஆகியோர் மீதும், புனிதா கொடுத்த புகாரின் பேரில் அன்பழகன், ஆகாஷ் என தனித்தனியாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிவா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News