சரக அளவிலான கேரம் போட்டி: ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை
- வயது வரம்பு அடிப்படையில் U-17 ஒற்றையர் பிரிவில் செங்கொடி முதல் இடம் பெற்றுள்ளார்.
- வெற்றிபெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாப்பிரெட்டிப்பட்டி,
முதலிடமும் பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-17 ஒற்றையர் பிரிவில் செங்கொடி முதலிடமும், கவிசரண் இரண்டாமிடமும், U-14 இரட்டையர் பிரிவில் கவிசரண் மற்றும் சரன்பாபு முதலிடமும்பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். U-17 ஒற்றையர் பிரிவில் தாஸ் இரண்டாமிடமும், U-19 ஒற்றையர் பிரிவில் சச்சி ன்தாசன் முதலிட மும்பிடித்து வெற்றி பெற்று ள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் முருகேசன் , செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.