உள்ளூர் செய்திகள்

வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா

Published On 2023-11-15 08:47 GMT   |   Update On 2023-11-15 08:47 GMT
  • குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
  • நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.

குழந்தைகளுக்கு நடனம், நாடகம் ஆகியவற்றை ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையின் முக்கியவத்துவம் குறித்து சிறு நாடகம் மூலம் அறிவுறுத்தப்பட்டது. நேருவின் பிறந்த நாள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News