உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே ஆடு திருடிய சென்னை வாலிபர் கைது

Published On 2022-10-06 07:02 GMT   |   Update On 2022-10-06 07:02 GMT
  • கிருஷ்ணன் காரணை பகுதியை சேர்ந்த தேவி ஆடுகள் வளர்த்து வருகிறார்.
  • ஆடு திருட முயன்ற அடையாறு பகுதியை சேர்ந்த அஸ்வின்குமாரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த கிருஷ்ணன் காரணை பகுதியை சேர்ந்தவர் தேவி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இங்கு மோட்டார் சைக்கிளில் வந்து ஆடு திருட முயன்ற அடையாறு பகுதியை சேர்ந்த அஸ்வின்குமார் (21) என்பவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை மாமல்லபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News