உள்ளூர் செய்திகள்

சென்னை தி.மு.க. பிரமுகர் மகன் கொலை: கடலூர் கோர்ட்டில் 6 பேர் சரண்

Published On 2023-11-01 09:11 GMT   |   Update On 2023-11-01 09:11 GMT
  • இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர்.
  • இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடலூர்:

சென்னை திருவெற்றியூர் விம்கோ நகரை சேர்ந்தவர் விவேகானந்தன். தி.மு.க பிரமுகர். இவரது மகன் காமராஜ் (வயது 35) இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர். கடந்த மாதம் 26-ந் தேதி காமராஜ் தனது அலுவகத்தில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் காமராஜை சரமாரி வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை எண்ணூரை சேர்ந்த அரவிந்தன்(25), இளந்தமிழன்(23), தினேஷ்(31), மனோ என்கிற மணவாளன்(29),காந்தி(23), திருவள்ளுர் மாவட்டம் கவுண்டர்பாளையம் ஜமாலுதின்(31) ஆகியோர் இன்று கடலூர் ஜே.எம். எண்.3 நீதிபதி ரகோத்தம்மன் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க எண்ணூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News