உள்ளூர் செய்திகள்

சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அச்சம் தீர்த்த விநாயகர்.

வேதாரண்யம் பகுதி கோவில்களில் சதுர்த்தி வழிபாடு

Published On 2023-09-19 14:58 IST   |   Update On 2023-09-19 14:58:00 IST
  • விநாயகருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேதாரண்யத்தில் உள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷே கங்கள் நடைபெற்றது.

பின், சிறப்பு சந்த னக்காப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

பின்னர், பக்தர்களுக்கு மோதகம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதேபோல், வேதாரண்யத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி கோவில், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்தி விநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்பவிநாயகர், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் மணர்குள சித்தி விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வினைகள் தீர வேண்டி விநாயகரை வழிபட்டனர்.

மேலும், வேதாரண்யம் காவல் சரகத்தில் 35 இடங்கள், கரியாப்பட்டினம் காவல் சரகத்தில் 35 இடங்கள், வேட்டைக்காரன் இருப்பு காவல் சரகத்தில் 13 இடங்கள் ஆக மொத்தம் 83 இடங்களில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, 2,3 நாட்கள் கழித்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News