உள்ளூர் செய்திகள்

அடையாறு பாலம் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் மத்திய கைலாஷ் சாலை மூடப்பட்டது

Published On 2023-12-06 06:49 GMT   |   Update On 2023-12-06 06:49 GMT
  • பள்ளத்தை சரி செய்யும் பணியில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
  • வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் சாலை மூடப்பட்டது. மத்திய கைலாசில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அடையாறு பாலம் அருகே சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தை சரி செய்யும் பணியில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் சாலை மூடப்பட்டதால் அப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News