உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் முதியவர் தவறவிட்ட செல்போன் மீட்டு ஒப்படைப்பு
- கலியமூர்த்தி தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்டேட் வங்கி முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போனை தவற விட்டுள்ளார்.
- தங்கையா என்பவர் அந்த செல்போனை கண்டெடுத்து அதனை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே எம்.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. ( வயது 62). இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்டேட் வங்கி முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போனை தவற விட்டுள்ளார். அந்த சமயம் அவ்வழியாக வந்த முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்த தங்கையா (80). என்பவர் அந்த செல்போனை கண்டெடுத்து அதனை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து முத்தையாபுரம் போலீசார் செல்போனை தொலைத்த கலியமூர்த்தியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்போனை ஒப்படைத்த முதியவர் தங்கையாவின் கைகளால் கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். செல்போனை மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த முதியவரின் செயலை முத்தையாபுரம் போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.