உள்ளூர் செய்திகள்
கோவையில் வணிக வரி அதிகாரியிடம் செல்போன் பறிப்பு
- இம்மானுவேல் சர்ச் அருகே போனில் பேசியபடி சென்றபோது, செல்போன் திருட்டு நடைபெற்றது.
- மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
கோவை.
கோவை ரேஸ்கோர்ஸ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன் (40). இவர் திருப்பூரில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் துணை வணிகவரி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இவர் திருப்பூரில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தார்.
பின்னர் காந்திபுரத்தில் இருந்து டவுன் பஸ்சில் உப்பிலிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ரேஸ்கோர்சில் வீட்டிற்கு நடந்து சென்றார்.
அங்குள்ள இம்மானுவேல் சர்ச் அருகே போனில் பேசியபடி சென்றபோது, அவரின் அருகே மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடி விட்டது. இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.