உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த ஓ.பி.எஸ். அணியினர்.

புளியங்குடியில் ஓ.பி.எஸ்.அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2022-08-18 09:37 GMT   |   Update On 2022-08-18 09:37 GMT
  • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
  • ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

புளியங்குடி:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து புளியங்குடியில் ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர் மூர்த்தி பாண்டியன் புளியங்குடி நகர நிர்வாகிகள் முருகன், துரைப்பாண்டியன், கணபதி, பம்பாய் மாடசாமி, மாரியப்பன், மகளிரணி மாவட்ட செயலாளர் சுவர்ணா, ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News