உள்ளூர் செய்திகள்

சி.சி.டி.வி. காமிராக்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் வழங்கிய காட்சி.


களக்காடு போலீஸ் நிலையத்திற்கு சி.சி.டி.வி. காமிராக்கள்ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-12-31 09:21 GMT   |   Update On 2022-12-31 09:21 GMT
  • களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
  • நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது சொந்த நிதியில் இருந்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு 6 சி.சி.டி.வி. காமிராக்களை, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் வழங்கினார்.

களக்காடு:

களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது சொந்த நிதியில் இருந்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு 6 சி.சி.டி.வி. காமிராக்களை, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் வழங்கினார்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், அமலன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டாரம், நகராட்சி, நாங்குநேரி மேற்கு வட்டாரம், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் அலெக்ஸ், ஜார்ஜ்வில்சன், வாகைதுரை, களக்காடு, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், வில்சன், துரைராஜ், ராஜன், துரை, ஜெயசீலன், ராஜன், பாக்கியராஜ், பெருமாள், பாஸ்கர், விபின், கண்ணன், அருள், அப்துல், முருகன், உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த காமிராக்கள் மூங்கிலடி, பச்சையாறு அணைக்கு செல்லும் பாதை, மங்கம்மாள் சாலையில் பொருத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News