உள்ளூர் செய்திகள்

நிறைவு விழாவில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.

தஞ்சையில், காவிரி இலக்கிய திருவிழா நிறைவு

Published On 2023-03-20 09:58 GMT   |   Update On 2023-03-20 09:58 GMT
  • 8 மாவட்டங்களை சார்ந்த 40-க்கும் அதிகமான இலக்கியவாதிகளும், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.
  • மாணவர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசு வழங்கினார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள சங்கீத மகால், சரசுவதி மகாலில் இரு நாள்களுக்கு நடைபெற்று வந்த காவிரி இலக்கியத் திருவிழா நேற்று மாலை நிறைவடைந்தது.

விழாவில் சரசுவதி மகாலில் படைப்பு அரங்கமும், சங்கீத மஹாலில் பண்பாட்டு அரங்கமும் நடைபெற்றன.

இவற்றில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களை சார்ந்த 40-க்கும் அதிகமான இலக்கியவாதிகளும், கவிஞர்களும் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர், இவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதன் நிறைவு விழா சங்கீத மகாலில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில், பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசுகள் வழங்கி பேசினார்.

இவ்விழாவில் பொது நூலக இயக்குநர் இளம்பகவத், எழுத்தாளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் முத்தையா வரவேற்றார்.

நிறைவாக, பொது நூலகத் துணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News