உள்ளூர் செய்திகள்
பணகுடி அருகே பெட்ரோல் பங்கில் பணம்-செல்போன் திருட்டு
- தாமஸ்க்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் உள்ளது.
- பங்கில் நேற்று புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு அலுவலகத்தில் இருந்த ரூ.16 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை திருடிச்சென்றார்.
நெல்லை:
குமரி மாவட்டம் நாகர்கோவில் கிறிஸ்டோபர் காலனியை சேர்ந்தவர் ஜோசி தாமஸ்(வயது 32). இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் உள்ளது. இந்த பங்கில் நேற்று புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு அலுவலகத்தில் இருந்த ரூ.16 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை திருடிச்சென்றார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.