உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி மீது வழக்கு பதிவு
- இமானுவேல்ராஜ் மனைவி மரியமத லேயம்மாள் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி லூர்துசசிகலா (வயது 35). இவருக்கும், இமானுவேல்ராஜ் மனைவி மரியமத லேயம்மாள் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இம்மானுவேல்ராஜ், மரியமதலேயம்மாள் ஆகிய இருவரும் சேர்ந்து லூர்துசசிகலாவை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இமானுவேல்ராஜ், மரியமதலேயம்மாள் ஆகியோர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.