உள்ளூர் செய்திகள்

கடையநல்லூரில் அதிக உயரத்தில் விநாயகர் சிலை வைத்த 5 குழுவினர் மீது வழக்கு

Published On 2022-09-03 08:43 GMT   |   Update On 2022-09-03 08:43 GMT
  • விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி, பா.ஜனதா மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
  • சுமார் 5 விநாயகர் சிலைகள் அரசு அனுமதித்த அளவை விட அதிக உயரம் கொண்டதாகவும், களிமண்ணுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருளால் தயாரிக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது.

நெல்லை:

விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி, பா.ஜனதா மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

நேற்று பெரும்பாலான சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது. அதில் சுமார் 5 விநாயகர் சிலைகள் அரசு அனுமதித்த அளவை விட அதிக உயரம் கொண்டதாகவும், களிமண்ணுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருளால் தயாரிக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது.

இதையடுத்து அந்த சிலைகளின் குழு பொறுப்பாளர்கள் தலா 2 பேர் உள்பட 10 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News