உள்ளூர் செய்திகள்

குடிேபாதையில் பேக்கரியை அடித்து நொறுக்கிய 2 பேர் மீது வழக்கு

Published On 2022-09-13 09:23 GMT   |   Update On 2022-09-13 09:23 GMT
  • இரும்பு கம்பியை கொண்டு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
  • இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.

சேலம்:

சேலம் மாவட்டம் மேச்சேரி கந்தநாயக்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவர் எறகுண்டப்பட்டியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு குடிபோைதயில் 2 பேர் வந்து முருகனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரும்பு கம்பியை கொண்டு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.

இது குறித்து முருகன், மேச்சேரி போலீஸ் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் விசாரணை நடத்தி,

மேச்சேரி திமிரி கோட்டைைய சேர்ந்த ராஜா மகன் மணி, தெத்திகிரிபட்டியை சேர்ந்த செல்வம் மகன் அருள்குமார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் மணி, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் என்பது போலீசாரின் விசாரணை தெரியவந்தது.

Tags:    

Similar News